Wednesday, April 13, 2011

5- 10

தனு: பௌஷ்பம் மௌர்வீ மது கர மயீ பஞ்ச விசிகா:
வஸந்த: ஸாமந்தோ மலய மருத் ஆயோதன ரத:
ததாப்யேக: சர்வம் ஹிமகிரி ஸுதே காமபி க்ரிபாம்
அபாங்காத்தே லப்த்வா ஜகதிதம் அனங்கோ விஜயதே

Oh Daughter of the Ice Mountain! The God Of Love who does not posess
a physical body and has a flower bow with bow string made of honey bees,
five arrows made only of tender flowers, with spring as an aide and riding
on a chariot of Malaya Mountain's breeze, is able to win all the world alone, with only a sideways glance of your Holy Eyes.

ஹிமவான் பெற்ற புத்திரியே!
மலரினால் செய்த வில்லை உடையவனும், தேனீக்களால்
செய்த வில்லின் நாணைக் கொண்டவனும், ஐந்து பூ
மொட்டுக்களால் ஆன வில்லை உடையவனும், வசந்தத்தை
அமைச்சராகக் கொண்டவனும், மலய மலையின் தென்றலை
தேராகக் கொண்டவனும் ஆன மன்மதனால், தனக்கென உடல்
என்ற ஸ்தூல சரீரம் இல்லாத போதும், உனது கடைக்கண்
பார்வையால் இவ்வுலகை வெல்ல முடிந்தது.

க்வணத் காஞ்சீ தாமா கரி கலப கும்ப ஸ்தன நதா
பரீக்ஷீணா மத்யே பரிணத சரச்சந்திர வதனா
தனுர் பாணான் பாசம் ஸ்ருணிம் அபி ததானா கரதலை:
புரஸ்தாத் ஆஸ்தாம் ந: புரமதிதுர் ஆஹோ புருஷிகா

With a golden belt beautified by tiny tingling bells
You are slightly bent by your breasts which are like
an elephant's two frontal tusks. With a thin beautiful
frame and with a face like an autumn moon, You hold in
your hands a sugarcane bow, flower arrows, a noose and
a goad. You - the one who has the wonderful form of the
ego of the God who burnt the three cities (Shiva)
should please come and appear before us.

ஒலிக்கும் சிறு மணிகளால் அலங்கரிக்கப்பட்ட தங்க ஒட்டியாணம் அணிந்தவளே!
யானையின் இரு தந்தங்களைப் போல உள்ள உன் இரு மார்புகளால் சற்றே வளைந்து இருப்பவளே!
மெல்லிய உடல் வாகோடு, நிலவைப் போன்ற குளிர் முகத்தோடு இருப்பவளே!
கையில் கரும்பு வில்லும், மலர் அம்புகளும், பாச, அங்குசமும் வைத்திருப்பவளே!
மூன்று நகரங்களை எரித்த கடவுளின் (சிவனின்) குணம் தாங்கியவளே!
தயை கூர்ந்து நீ எங்கள் முன் வந்து எங்களுக்கு காட்சி தருவாயாக.

ஸுதா ஸிந்தோர் மத்யே ஸூர விடபி வாடீ பரிவ்ருதே
மணி த்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே
சிவாகாரே மஞ்சே பரம சிவ பர்யங்க நிலயாம்
பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சித் ஆனந்த லஹரீம்

In an island of precious gems located amid a sea of nectar surrounded
by wish giving kalpaga trees, is located a garden of Kadamba trees.There
in the house of the gem of thought, on the holy seat of the lap of the great
God Shiva, She sits like a tide in the sea of happiness of ultimate truth
worshipped only by a few select holy men.

அமிர்தக் கடலின் மத்தியில், வரங்கள் தரும் கற்பக மரங்கள்
சூழ்ந்த விலை உயர்ந்த ரத்தினங்களால் நிறைந்த ஒருதீவில், கடம்ப மரங்களால் ஆன ஒரு நந்தவனம் அமைந்துள்ளது. எண்ணங்களின் ரத்தினமான இல்லத்தில், பரப்ரஹ்மம் ஆன ஆனந்த சமுத்திரத்தின் அலையைப் போல, மிகச் சில புனிதர்களால் மட்டுமே வணங்கப்படும் தாய், சிறந்த கடவுளான சிவனின் மடி என்ற புனித இருக்கையில் அமர்ந்துள்ளாள்.

மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்திதம் ஸ்வாதிஷ்டானே ஹ்ருதி மருத மாகாசம் உபரி
மனோ(அ)பி ப்ரூ மத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரசே

Oh,my Goddess! In the thousand petalled lotus,You live in seclusion with
your consort.This lotus can be reached after breaking through the microways of
1. The power of earth in Mooladhara,
2. The power of water in Manipoora,
3. The power of fire in swathishtana,
4. The power of air in heart(Anahatha),and
5. The power of ether in between the eyelids(Agna).

என் தாயே! ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில், நீ தனிமையில்
உனது துணையுடன் வசிக்கின்றாய். இந்தத் தாமரையை கீழ்கண்ட தளைகளை உடைத்து தான் வர முடியும்:
1. மூலாதாரமான பூமியின் சக்தி
2. மணிபூரகமான நீரின் சக்தி
3. ஸ்வாதிஷ்டானமான அக்னியின் சக்தி
4. அனாஹதமான (இருதயத்தில்) காற்றின் சக்தி
5. ஆக்னமான (புருவங்களின் இடையில்) ஆகாயத்தின் சக்தி.

ஸூதா தாரா ஸாரை: சரண யுகளாந்தர் விகளிதை:
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்நாய மஸ:
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜக நிபம் அத்யுஷ்ட வலயம்
ஸ்வம் ஆத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி

All the nerves of the body are drenched using the nectar flowing in
between your feet. You descend from the moon with nectar like
rays, reaching back to your place, coiling your body into a ring like
that of a serpent and sleeping in the Mooladhara with a hole in the middle.

உனது கால்களின் இடையே ஓடும் அமிர்தத்தால், உடலில்
உள்ள எல்லா நரம்புகளும் நனைந்துள்ளன. நிலவிலிருந்து,
தேன் போன்ற கிரணங்களைப் போன்று நீ இறங்கி வந்து, உனது
இடத்தை அடைந்து, உனது உடலை சர்ப்பத்தைப் போல்
வளைத்து, மூலாதாரத்தின் நடுவில் ஒரு துளை இருப்பது
போல நீ உறங்குகின்றாய்.

Soundarya Lahari 1-5

சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திதும் அபி
அதஸ் த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதிபிர் அபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதம் அக்ருத புண்ய: பிரபவதி

Lord Shiva is able to create this world only with the
help of Shakthi (Parvathi). Without Her, He cannot even
move an inch. Likewise how can one who has not done any
good deeds or hasn 't sung your praise be sufficient
(competent) to worship you? - Oh my Goddess, one who is
worshipped by Trinity.

தநீயாம்சம் பாம்ஸும் தவ சரண பங்கேருஹ பவம்
விரிஞ்சி: சஞ்சின்வன் விரசயதி லோகானவிகலம்
வஹத்யேனம் செளரி: கதம் அபி சஹஸ்ரேந சிரஸாம்
ஹர: சம்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூலன விதிம்

The creator of Universe - Brahma has created this world
by selecting a dust from Your feet.
The thousand headed Adhisesha with great effort somehow
carries a dust of your feet.
The Great Lord Rudra takes this dust, pulverizes it and
uses it as Holy Ash.

அயன் (பிரம்மா) உன் காலடி மண்ணினால் இந்த அகிலத்தைப்
படைத்தான்.
ஆயிரம் தலை உடைய ஆதிசேஷன் பெரும் சிரமத்தோடு உன்
கால் தூசினை சுமந்தான்.
அதிபதியான சிவனோ இத்தூசினைப் பொடித்து திருநீறாக அணிகிறான்
அவித்யானாம் அந்தஸ் திமிர மிஹிர த்வீப நகரீ
ஜடானாம் சைதன்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதி ஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி குணநிகா ஜன்ம ஜலதௌ
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முர ரிபு வராஹஷ்ய பவதி

Oh Great Goddess!
The dust under your feet is like a city under a rising sun that dispels all darkness from the minds of the poor ignorant souls
For the slow witted ones, this dust is like the honey that flows from the bunch of flowers of vital action
For the poor people, this dust is like the heap of wish giving gems
And for those drowned in this sea of birth it is like Lord Vishnu's teeth who as Varaha brought to surface the Mother Earth.

தாயே! உனது கால் தூசி -
உதிக்கின்ற சூரியன் எவ்வாறு ஒரு நகரத்தின் இருளைப் போக்குகின்றதோ, அது போல அஞ்ஞானத்தில் உழல்பவரின் மன இருளைப் போக்குகின்றது
மந்தமாக உள்ளவர்களுக்கு, அத்யாவசிய செயல்கள் என்ற மலர்களில் இருந்து ஓடும் தேன் போன்றது
ஏழைகளுக்கு, வரமாக ரத்தினக் குவியல்களை அளிப்பது
சம்சார சாகரத்தில் உழல்பவர்களுக்கு, வராக அவதாரத்தில் பூமா தேவியை பாற்கடலின் மேல் கொண்டு வந்த விஷ்ணுப் பெருமானின் பல் போல அபயம் அளிக்க வல்லது.

த்வத் அன்ய: பாணிப்யாம் அபய வரதோ தைவதகண:
த்வம் ஏகா நைவாஸி ப்ரகடித வராபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலம் அபி ச வாஞ்சா சமதிகம்
சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுநௌ

Oh Mother! You are the refuge to every one in this
world. All other Gods other than you, give refuge
and grant wishes only by their hands. Mother, you
alone never shows to the world in detail the boons
and wishes you can give. This is because your holy
feet is sufficient enough for the devotees to remove
fear for ever and grant boons more than they asked for.

தாயே! நீயே உலகில் உள்ள எல்லோருக்கும் சரணாகதி
அளிப்பவள். உன்னைத் தவிர பிற கடவுளர்கள், தங்கள்
கரங்களால் அபய வரதம்* அளிக்கிறார்கள். நீயோ உலகிற்கு
உனது அபய வரதம் அளிக்கும் மகிமையை வெளிக்
காட்டுவதில்லை - ஏனென்றால், உனது திருபாதங்களே
பக்தர்களின் துயர்களை எப்பொழுதும் நீக்கி அவர்கள்
வேண்டியதை விட அதிகமாக வரம் அளிக்கின்றது.
* அபய - சரண் அளிப்பது; வரதம் - வரம் அளிப்பது

சிவ பெருமானால் இவ்வுலகில் சக்தியின் துணையோடு தான்
காக்கும் தொழிலை செய்ய முடிகிறது. அவள் இல்லையேல்
அவனால் ஒரு அங்குலமும் அசைய / அசைக்க முடியாது.
அது போல வாழ்வில் எந்த ஒரு நற்காரியமும் செய்யாத
ஒருவனால், உன்னை போற்றி பாடாத ஒருவனால் உன்னை
வணங்கும் தகுதியை எவ்வாறு பெற முடியும்?
தாயே நீயே மும்மூர்த்திகளாலும் வணங்கப்படுபவள்.

ஹரிஸ் த்வாம் ஆராத்ய ப்ரணத ஜன சௌபாக்ய ஜனனீம்
புரா நாரீ பூத்வா புர ரிபும் அபி க்ஷோப மனயத்
ஸ்மரோ(அ)பி த்வாம் நத்வா ரதி நயன லே ஹ்யேன வபுஷா
முனீ நாம் அப்யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம்

Mother! You grant all the good things to those who bow at your feet.
Lord Vishnu disguised as a pretty and lovable woman had moved the mind of Rudra who burnt the cities, by making Him (Shiva) fall in love with Him (Vishnu)has worshipped you.
Manmadha - the God of Love, worshipping you got the special form which in Rathi's eyes was like nectar to drink and made the great sages fall for him in delusion.

தாயே! உன் காலைத் தொழுபவர்களுக்கு நீ நல்லதே அளிக்கின்றாய்.
மோகினி அவதாரத்தில், நகரங்களை எரித்த சிவனையே மயக்கி காதலில் விழ வைத்த விஷ்ணுவே உன்னைத் தொழுதுள்ளார்.
உன்னை வணங்கியதால் காம ராஜன் மன்மதனுக்கு அவன் மனைவி ரதியின் பார்வையில் சிறந்த சரீரம் கிடைத்து, அதை தேனாகப் பருக வைத்தது. தவ ஸ்ரேஷ்டர்களான முனிவர்களை மாயையில் அவனிடம் விழ வைத்தது.